Youth suicide in Perambalur!

பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள கணபதி நகரை சேர்ந்தவர் ராமதாஸ். கார் டிரைவராக உள்ளார். இவரது மகன் மகேஷ்குமார் (29) இவருக்கு திருமணம் நடக்க பெண் கிடைக்காத ஏக்கத்திலும், நரம்பு தொடர்பான பாதிப்பும் இருந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ்குமார் நேற்று மாலை வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் மாலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்துள்ளவர்கள் பார்த்து அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்கு இறந்த வாலிபரின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நடத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!