The martyrs Redressal meeting on the 21st of Namakkal
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு;
நாமக்கல் மாவட்ட சுதந்திரப் பேராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகளின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் வருகிற 14ம் தேதி நாமக்கல் மாவ ட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த குறைதீர் கூட்டம் வருகிற 21ம் தேதி மாலை 3.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். எனவே சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களைக் கொடுத்து பயன்பெறலாம் எற்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.