Temporary bus driver’s vehicle near the roadside ditch plea to crash down
பெரம்பலூர் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த 4B நகரப்பேருந்து கீழப்புலியூர் கிராமத்திற்கும், சிறுகுடல் கிராமத்திற்கும் இடையே வளைவு ஒன்றில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்திற்குள் இறங்கி விபத்திற்குள்ளானது.
அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். பேருந்தை இயக்கி வந்த தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம் எடுத்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.