Super Market Opening Ceremony of Sabra Group in Ramanathapuram
ராமநாதபுரம் : மக்களுக்கு அனைத்து பொருட்களும் மலிவு விலையிலும் தரமானதாகவும் கிடைக்க சப்ரா குழுமத்தின் சார்பில் ராமநாதபுரத்தில் சுப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது.
மலேசியா, சி்ங்கப்புர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிறந்த உணவகங்கள் நடத்தி வரும் ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவரும், சாத்தான்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவருமான காபத்துல்லா ராமநாதபுரம் சமீப காலமாக தமிழர்களின் நலனுக்காக தமிழகத்தில் பல்வேறு தொழில்நிறுவனங்களை தொடங்கி வருகிறார்.
இங்கு மக்களுக்கு குறைந்தவிலையில் தரமான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் முயற்சி எடுத்து ராமநாதபுரம், சென்னை போன்ற நகரங்களில் ஷாப்பிங் மால் நடத்தி அதில் ஏ டு இசட் அனைத்து வகையான வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும் வகையில் தொழில் தொடங்கி உள்ளார். அந்தவகையில் தற்போது மேலும் தொழில் நிறுவனத்தின் ஒரு மைல்கல்லாக ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் சப்ரா சுப்பர் மார்க்கெட் தொடங்கி உள்ளார்.
திறப்பு விழா
சப்ரா சுப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், சக்கரக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் சமுக சேவகருக்கான டாக்டர் விருது பெற்றவருமான நுார்முகம்மது, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவரம் அதிமுக பிரமுகருமான ஜி.முனியசாமி, ஜேம்ஸ் அன்கோ நிறுவன பங்குதாரர் ஜேம்ஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். முதல்விற்பனையை வர்த்தக சங்க செயலாளர் கோவிந்தராஜன் சாத்தான்குளம் மலேசியா முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏபிசி அயுப்கான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திறப்பு விழாவில் ராமநாதபுரம் வசந்தா கன்ஸ்ட்ரக்சன் தலைமை இன்ஜினியர் ராஜேஸ்கண்ணா, ராமநாதபுரம் தாலுகா வீட்டு வசதி சங்க தலைவர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், பாரதிநகர் ரோட்டரி சங்க தலைவவர் ஆடிட்டர் லோகநாதன், செயலாளர் பி.டி.ராஜா, ஜெகன் தியேட்டர் அதிபர் சுகுமார், டாக்டர்கள் கனி, சாகுல்ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவிற்கு வந்த அனைவரையும் சப்ரா குழுமத்தின் சார்பில் நிர்வாக இயக்குனர் சபீர் அலி, சித்தி ஜரினா, சாகுல்ஹமீதுஜம்ரீயா, முகம்மதுஜான் சப்ரா ஆகியோர் வரவேற்றனர். சப்ரா குழும சேர்மன் காபத்துல்லா விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்தும் மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றார். சென்னை ஓட்டல் சப்ரா நிர்வாக இயக்குனர் முகம்து அலிநன்றி தெரிவித்தார்.