Sports competitions for Staff, on the Co-operative Week celebration in Namakkal

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 65வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் போட்டிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கபாடி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், அகலம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

சுமார் 300க்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் போட்டிகளில் கலந்துகொண்டனர். டிசிஎம்எஸ் சங்க நிர்வாக இயக்குனர் ரவிகுமார், துணைப்பதிவாளர்கள் ரவிச்சந்திரன், வெங்கடாசலம், பூபாலன், முருகேசன், பாலசுப்ரமணியம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாக இயக்குனர் குணசேகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!