Special redressal Camp for Perambalur District Disabled People Announcement: Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் கூட்டரங்கில் எதிர்வரும் 31.08.2018 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் இலவச பேருந்து பயண சலுகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் 31.08.18 அன்று நடைபெற உள்ள சிறப்பு முகாமில் காலை 11.00 மணிமுதல் கலந்து கொண்டு, தங்களது தேவைகளை கேரிக்கைகளாக தெரிவிக்கலாம் என்றும்,

இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவணம் செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெற கேட்டுக் கொண்டுள்ளளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!