Special Private Employment Camp in Namakkal: Collector Information!

நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு :

தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள பனிரெண்டாம் வகுப்பு முடித்தோர் மற்றும் பட்டதாரிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை 25ம் தேதி நடைபெறுகிறது.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சூப்பர்வைசர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், கண்காணிப்பாளர், மேலாளர், கணக்காளர், காசாளர், டைப்பிஸ்ட், சேல்ஸ் அசோசியேட் போன்ற பணிகளுக்கு பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை (25ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!