Special Manifestation of Valiyapadi village near Perambalur
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில இன்று ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறை வாயிலாக 199 பயனாளிகளுக்கு ரூ.93.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இன்று 169 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய 55 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நவீன முறை சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட சார்பு நீதிபதி வினோதா விளக்கஉரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.