Special grievance day meeting for the differently abled in Perambalur: Collector V.Santha announces
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, இன்று விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் எதிர்வரும் ஜீலை 29. அன்று காலை 10.15 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவணச் செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெற கேட்டுக் கொண்டுள்ளார்.