Skills training camp on the 31 recorded in Namakkal: Placement Officer informed!

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள தகவல்:

தமிழக அரசால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு திறன் பயிற்சி பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு, பயன்தாரர்கள் விரும்பும் துறையில் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இத்திறன் பயிற்சி பதிவு முகாமானது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 31ம் தேதி வியாழக்கிழமை காலை 10மணிக்கு நடைபெறுகிறது. இம்முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அழகு கலை, தையல் பயிற்சி, பெட்சைட் அசிஸ்டெண்ட், சிசிடிவி கேமரா பொருத்தும் பயிற்சி, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பயிற்சி, எலக்ட்ரீசியன், வெல்டர் பயிற்சி, லேத் ஆப்பரேட்டர் பயிற்சி, ஆட்டோமோட்டிவ் சர்வீஸ், டெக்னீசியன் பயிற்சி, மற்றும் டிரைவிங் பயிற்சி போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்க பதிவு செய்யப்படுகிறது.

இப்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், தொடர்புடைய தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது. மேலும் இப்பயிற்சியின் போது போக்குவரத்து செலவினம், பயிற்சி புத்தகம், எழுதுபொருள் புத்தகப்பை போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் திறன்பயிற்சியின் முக்கியத்துவம், திறன் பயிற்சியின் பயன்கள், திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் பல்வேறு இலவச பயிற்சிகள், தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கான அரசுத்திட்டங்கள் போன்ற பல்வேறு தலைப்புகள் பற்றி விளக்கவுரை அளிக்கப்படும்.

எனவே வேலைவாய்பபற்றோர் உதவித் தொகைப் பெற்றுவரும் பயனாளிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் இம்முகாமில் கலந்துக்கொண்டு தங்களுக்கு விருப்பமான திறன் பயிற்சிகளுக்கு பதிவு செய்து, விரும்பும் பயிற்சியை இலவசமாக பெற்று பயனடைலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!