Seven people can not take any decision in relief and release: Minister Pon. Radhakrishnan

சிவகங்கை: பேரறிவாளன் உள்ளிட்ட பேர் விடுதலை விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சிவகங்கையில் மத்தியஇணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. ராஜீவ் கொலை வழக்கில் கைதானோரின் விடுதலை விவகாரம் நீதி சம்பந்தமானது. காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்த போது 7 பேரையும் விடுக்காதது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!