School student commit Suicide by poison drunken near Perambalur
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவி விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தை சேர்ந்த
நல்லதம்பி-கவிதா தம்பதியினரின் இரண்டாவது மகள் சினேகா(17), இவர் குன்னம்
பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு கணிதம் படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த சினேகா பூச்சு கொல்லி மருந்து
குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில்
மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.