Regional level tournaments in Perambalur: MLA Tamilselvan inaugurated
பெரம்பலூரில் இன்று அரசுக்கு சொந்தமான விளையாட்டு அரங்கில், பெரம்பலூர், வேப்பூர், லால்குடி, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், உடையார்பாளையத்தை சேர்ந்த எட்டு கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. அதனை பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை பாராட்டினார். அப்போது உடற்கல்வித்துறை அலுவலர்கள் பலர் போட்டிகளை நடத்தி வைத்தனர்.