Discussion at the redressal of public meeting in Namakkal ; Welfare Assistance Provide by the DRO

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் (பொ) பழனிச்சாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்த மொத்தம் 317 மனுக்களை வழங்கினர்.மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் (பொ) மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டார்.

பின்னர் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் 7 மாணவர்களின் பெற்றோர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளை கலெக்டர் (பொ) பழனிச்சாமி வழங்கினார். இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் டிஎஸ்ஓ பர்ஹத் பேகம் உள்ளிட்டஅனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!