Ready for sale of Co-4 feeders for Namakkal farmers
நாமக்கல்லில் கோ-4 தீவன கரணைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடைப் பண்ணை வளாகத்தில் கோ.4 ரக தீவனப் புல்லின் கரணைகள் விற்பனைக்கு உள்ளது. இரண்டு கணு உள்ள ஒரு தீவனக் கரணையின் விலை 50 பைசா ஆகும்.
ஒரு ஏக்கருக்கு 16 ஆயிரம் தீவனக் கரணைகள் தேவைப்படும். தீவனக் கரணைகள் தேவைப்படுவோர். கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை வளாக பேராசிரியர் மற்றும் தலைவரை அணுகி பெற்றுக்கொள்ளலாம். இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.