Ramanathapuram Electric Labor Worker’s Biggest Festival

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ராமநாதபுரம் திட்டம் சார்பில் திட்டப்பொதுக்குழு, திட்டமாநாடு, 60 ஆண்டுகள் வைரவிழா காணும் பொது செயலாளருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.

ராமநாதபுரம் திட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவிற்கு திட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திட்ட செயலாளரும் மாநில துணை பொது செயலாளருமான வி.சி.மோகன் வரவற்புரை ஆற்றி ஆண்டறிக்கை வாசித்தார்.

மாநில பொது செயலாளர் சிங்கார.ரத்தின சபாபதி கவுரவிக்கப்பட்டார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், தி.மு.க. மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம், மாநில தலைவர் கணபதி, மாநில அமைப்பு செயலாளர் கருணாநிதி, மாநில சிறப்பு தலைவர் ரவீந்திரன், வட்டார செயலாளர் தமிழ்செல்வன், திட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், திட்ட துணைத்தலவர் ராமர், கோட்ட செயலாளர் முகமது சபீக், நாகராஜ், சுப்பிரமணி, ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். திட்ட பொருளாளர் வீரசேகர் நன்றி தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!