Public roadblock for with empty pots asking for drinking water near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்காததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்.

பெரம்பலூர் – துறையூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த

பாடாலூர் போலீசார், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர், கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!