Public demands to Collector for additional rain gauges in Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெரம்பலூர், வேப்பந்தட்டை, தழுதாழை, கிருஷ்ணாபுரம், வி.களத்தூர், ச.எறையூர், லப்பைக்குடிக்காடு, அகரம் சீகூர், புதுவேட்டக்குடி, பாடாலூர், செட்டிக்குளம் ஆகிய 11 இடங்களில் மழைமானி வைத்து மழையளவு கணக்கீடு செய்யப்படுகிறது. அதனால், அப்பகுதியில் பொழியும் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கில் கொண்டு, ஆய்வு அறிக்கைகள் தயாரிப்பதுடன், பயிர் செய்யவும், திட்டமிடலாம். ஆகையால், கூடுதலாக எசனை, மலையாளப்பட்டி, பூலாம்பாடி, கை.களத்தூர், குன்னம், கொளக்காநத்தம், அம்மாபாளையம், குரும்பலூர், அடைக்கம்பட்டி ஆகிய ஊர்களில் வானிலை தொடர்பான தகவல் பெற கூடுதல் மழைமானி அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைமானி ஒன்று அமைக்க சுமார் 15 ஆயிரம் மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.