Private sector job camp in Namakkal; Choose 38 people
நாமக்கல்லில் நடைபெற்ற தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் 38 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தனியார்துறை நிறுவனங்களும் -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.
அதேபோல் இந்த மாதத்திற்குரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கேர் டிரஸ்ட், அக்மா கேர், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் பங்கேற்றனர்.
இந்த முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த வேலை நாடுநர் 77 பேர் பங்கேற்றனர். இதில் 38 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமனை உத்தரவு வழங்கப்பட்டது.