Private sector employment camp at Perambalur: District Collector V.Santha Information.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் நடத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 03.08.2018 அன்று தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் சென்னை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் கலந்து கொண்டு சேல்ஸ் எக்சிகியூட்டிவ், சூப்பர்வைசர், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்துகொள்பவர்கள் 8ம், 10, 12 மற்றும் டிப்ளமோ டிகிரி படித்திருக்கவேண்டும்.

மேலும் இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை உடன் எடுத்து வரவேண்டும், தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!