Police arrest case against 2 accused, including Rs 17,000 confiscation

நாமக்கல், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டின்போகது கணக்கில் வராத ரூ.17,000 பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சார்பதிவாளர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் அருகில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெய்குமார் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது கணக்கில் வராத ரூ.17,050 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சார்பதிவாளர் (பொ) சுகம், அலுவலக உதவியாளர் சந்திரமோகன் ஆகிய 2 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!