Perambalur – Sithali MCP Ceremony: Rs.1.60 crore welfare assistance
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா குன்னம் வட்டத்திற்குட்பட்ட சித்தளி (கிழக்கு) கிராமத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 202 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர; திரு.மா.சந்திரகாசி மற்றும் குன்னம் சட்டமன்ற உறுப்பினா; திரு.ஆh;.டி.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், விபத்து நிவாரண உதவித்தொகை, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, முதிர்கன்னி, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், பசுமை வீடு வழங்கும் திட்டம், சொட்டுநீர்பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைத்தல், விவசாய பயிர்க்கடன் உதவிகளும், விலையில்லா சலவைப் பெட்டிகள், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.23,130- மதிப்பிலான மூன்று சக்கர நாற்காலிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் 202 பயனாளிகளுக்கு ரூ.1,60,55,451- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தி.ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.