Namakkal District Education Dept. teachers, Co-workers launch austerity Monetary Union
நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அரசு மற்றும் நகராட்சி, உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் துவக்க விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை விழா நடைபெற்றது.
விழாவினை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் மாயவன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் பூபாலன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் கூட்டுறவு சார்பதிவாளர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவச்சலம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன், மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில மகளிர் அணி செயலாளர் வாசுகி ஆகியோர் பங்கேற்று பேசினர். சங்க துணைத்தலைவர் குமார் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் குமார், இயக்குநர்கள் கண்ணன், குணசேகரன், அருள் செல்வன், அரஜூனன், செல்லத்துறை, சுப்பிரமணியன், ரேணுகாதேவி, மாலதி, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.