ramananசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று ஓய்வு பெற்றதை அடுத்து , அவருக்கு பிரிவு உபச்சார விழா விமரிசையாக நடைபெற்றது.

60 வயது நிறைவு பெற்றதையடுத்து , சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு ரமணன் பிரியாவிடை கொடுத்தார்.

36 ஆண்டுகள் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இதில் 14 ஆண்டுகள் இயக்குனராக பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என குறிப்பிட்ட அவர், தன்னை மக்களுக்கு அறிமுகப்படுத்திய மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இனி வாழ்வின் அடுத்த அத்தியாத்தை மாணவர்களுடன் கலந்துரையாட விரும்புவதாகவும் அவர் கூறினார். முன்னதாக ரமணனுக்கு பிரிவு உபச்சார விழாவில் கேக் வெட்டி, சக ஊழியர்கள் பிரியா விடை கொடுத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!