MCP closing ceremony near Perambalur: Rs.3.19 crore Welfare Assistance

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 296 பயனாளிகளுக்கு ரூ.3.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி வழங்கினார்.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன் பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 45 பயனாளிகளுக்கு ரூ.35,66,000- மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களும், 18 பயனாளிகளுக்கு ரூ.13,67,500- மதிப்பில் முதலமைச்சரின் விபத்து நிவா ரண தொகைகளும், 15 பயனாளிகளுக்கு ரூ.1,20,000- மதிப்பில் திருமண உதவித்தொகைகளும், 19 பயனாளிகளுக்கு ரூ.4,27,500- மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகை, 18 பயனாளிக்கு ரூ.2,16,000- மதிப்பீட்டிலான முதியோர் உதவித் தொகைகளும், 16 பயனாளிகளுக்கு ரூ.33,60,000- மதிப்பிலான முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் உதவிகளும், 100 பயனாளிகளுக்கு ரூ.1,70,00,000- மதிப்பீட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள நலத்திட்ட உதவிகளையும், 13 பயனாளிகளுக்கு ரூ.1,56,000- மதிப்பிலான மின்னணு குடும்ப அட்டைகளும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.23,138- மதிப்பீட்டில் விலையில்லா சலவைப் பெட்டி மற்றும் தையல் இயந்திரங்களும், 13 பயனாளிகளுக்கு ரூ.52,63,000- மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கடன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத் துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1,16,365ஃ- மதிப்பீட்டிலான தெளிப்பு நீர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும்,

வேளாண்மைத் துறை மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.3,77,186- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், கால்நடைத் துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.3,600ஃ- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் என பல்வேறு துறைகளின் சார;பில் 296 பயனாளிகளுக்கு ரூ.3,19,96,289ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினா; திரு.இரா.தமிழ்ச்செல்வன் அவா;கள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலா; திரு.அழகிhpசாமி அவர;கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தனித்துணை ஆட்சியர் மனோகரன், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் சந்தான கிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டாட்சியர்கள் பாரதிவளவன், செல்வராஜ் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!