MCOP Ceremony at Elampur village MLA, Tamilselvan participated.
பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா, எளம்பலூர் கிராமத்தில நேற்று பெரம்பலூர் எம்.எல்.ஏ., இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 311 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 70 லட்சத்து 68 ஆயிரத்து 838 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.