Kamaraj Memorial Day, in honor of dressing Garland Perunthalaivar makkal Katchi in Ramanathapuram
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 44வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி மற்றும் தாமரைக்குளம் ஆகிய ஊர்களில் அமைந்திருக்கும் பெருந்தலைவர் காமாராஜரின் சிலைக்கு, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் ரஜி சேதுபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி மண்டபம் ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் போஸ், கருணேஷ், பிரதீப், ஜெகன், தினேஷ் மற்றும் இதர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.