In the district of Perambalur heavy winds: trees fell down.

பெரம்பலூரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள எசனை, வேப்பந்தட்டை, அனுக்கூர், பாலையூர், அன்னமங்கலம், அரசலூர், இரட்டைமலை சந்து உள்ளிட்ட பல ஊர்களில் மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதில். வயல்களில் இருந்த வாழை மரங்கள் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆங்காங்கே சரிந்து வீழ்ந்தன. கூரை வீடுகள் காற்றி பறந்தது. மேலும், இடி மின்னலும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் மின்சார வினியோம் சில மணி நேரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டது.

பதிவான மழையளவு விவரம் மி.மீ-ல்: பெரம்பலூர் 2 மி.மீ, வேப்பந்தட்டை 60, தழுதாழை 0, பாடாலூர் 3 என மொத்தம் 79 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 15.80

மேலும், நேற்று பெய்தை மழையால் விதைப்பு பணிகள் மீண்டும் தீவிரமாகி உள்ளன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!