Free Training Camp on Combine Fisheries in Namakkal

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 25ம் தேதி வெள்ளிகிழமை காலை 9 மணிக்கு கூட்டு மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் மீன் வளர்ப்புக்கு ஏற்ற இடம் தேர்வு, பண்ணைக் குட்டை அமைத்தல், தண்ணீரின் தரம் அறிதல், பலவகை மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், உணவு முறைகள், நோய்கள் தடுப்பு முறைகள் மற்றும் விற்பனை உத்திகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர்;, இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 2ம் தேதி காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!