Free skills in the training camp in Namagiripettai 20th: Collector Informed

நாமகிரிப்பேட்டையில் வருகிற 20ம் தேதி இலவச திறன்விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசால் திறன் பயிற்சி, திறன்விழிப்புணர்வு மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி கிராமப்புற வேலைநாடுநர்களை சென்றடையும் வகையில் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்தும் வகையில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளா வருகிற 20ம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் 5ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அழகு கலை, தையல் பயிற்சி, பெட் சைட் அசிஸ்டெண்ட், சிசிடிவி கேமரா பொருத்தும் பயிற்சி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பயிற்சி, எலக்ட்ரீசியன், வெல்டர் பயிற்சி, லேத் ஆப்ரேட்டர் பயிற்சி, ஆட்டோ மேட்டிவ் சர்வீஸ் டெக்னீசியன் பயிற்சி மற்றும் டிரைவர் பயிற்சி போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இந்நிறுவனங்களால் அளிக்கப்படும் பயிற்சிகளில் விருப்பப்படும் திறன் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறலாம். இப்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், தொடர்புடைய தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

மேலும், இப்பயிற்சியின்போது போக்குவரத்து செலவினம், பயிற்சி புத்தகம், எழுது பொருள், புத்தகப்பை போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

எனவே இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கம் முகாமில் கலந்து கொண்டு திறன்பயிற்சிக்கு பதிவு செய்து, இலவச பயிற்சி பெற்று பயன்பெறுமாறுகலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!