Free housing for homeless people SC & ST strap: Perambalur collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கிட நிலம் எடுப்பு செய்யும் திட்டத்தின் கீழ் வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களில் இலவச வீட்டு மனைப் பட்டா தேவைப்படும் பயனாளிகள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் 08.09.2017-க்குள் உரிய விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையில் நிலம் தர முன்வரும் நில உரிமையாளர்கள் நிலம் தர முன்வருவது தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை 08.09.2017-க்குள் நேரில் அணுகலாம், என தெரிவித்துள்ளார்.