Former army man can apply for railways vacant posts
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு :
இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், இப்பணியிடங்களுக்கு இன்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை வருகிற 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது சம்மந்தமான முழு விபரங்களுக்கு இந்தியன் ரயில்வேஸ்.ஜிஓவி.இன் என்ற இன்டர்நெட் முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இந்த தேர்விற்கு முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.