Electricity Supply Board to provide the working contract workers protesting for daily wage of Rs 380

பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ) சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டத்தலைவர் கண்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ. 380 வழங்க கோரிக்கை வைத்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் அபிமன்னன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். வட்டச்செயலாளர் எஸ்.அகஸ்டின், வட்டப் பொருளாளர் வி.தமிழ்ச்செல்வன் உள்பட பலர் விளக்கரை ஆற்றினர்.

சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!