loanபெரம்பலூர் மாவட்டத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்குரிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள் மூலம் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பொது கால கடன் திட்டம் மற்றும் தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை கடனுதவியும், பெண்களுக்கான புதிய பொற்கால திட்டத்தின் கீழ் ரூ.1 இலட்சம் வரை கடனுதவியும் வழங்கப்படுகிறது.

கறவைமாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடனுதவியும், போக்குவரத்து இனங்களுக்கான காலக்கடன் மூலம் வாகனங்கள் வாங்கிட ரூ.3 இலட்சத்து 13 ஆயிரம் வரை கடனுதவியும் வழங்கப்படுகிறது. சுயஉதவி குழுவிற்கு ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

மேற்கண்ட திட்டங்கள் மூலம் கடன் உதவிபெற விரும்புவோர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராகவும், குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருப்பின் ரூ.98 ஆயிரமும், நகர்ப்புறமாக இருப்பின் ரூ.1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமலும் கொண்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுயஉதவி குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாயிருக்க வேண்டும். இந்த சுயஉதவி குழுக்கள் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் கடன் உதவி பெற கோரும் விண்ணப்பங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்ததி செய்யப்பட்ட விண்ணப்பங்களானது ஜுன் 1 முதல் ஜுன் 30ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேற்படி விண்ணப்பங்கள் தேர்வு குழவால் ஆய்வு செய்யப்பட்டு கடன் பெறுவோர் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும், விவரங்கள் அறிய வேண்டுமாயின் பெரம்பலூர் மாவட்ட இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) மற்றும் பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோரை நேரில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என்றும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!