DMK Perambalur District Secretary Kunnam C Rajendiran Notice

பெரம்பலூர்- மக்களிடம் செல்வோம்-மக்களிடம் சொல்வோம்-மக்கள் மனதை வெல்வோம் என்று திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் அறிவிப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் குறித்து திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

பெரம்பலூர் ஒன்றியம் : ஜன.21 அன்று மாலை- 6 மணிக்கு வேலூர், மாலை-7 மணி சத்திரமனை, ஜன.22 அன்று மாலை 5 மணி – எளம்பலூர், மாலை 6 மணி – செங்குணம், மாலை 7 மணி – கவுள்பாளையம். ஜன.23 அன்று மாலை- 6 மணி- மேலப்புலியூர், மாலை 7 மணி – எசனை, இரவு 8 மணி – கீழக்கரை, 24-01-19 அன்று மாலை 6 மணி- அய்யலூர், மாலை 7 மணி – சிறுவாச்சூர். ஜன 26 அன்று மாலை 6 மணி – பொம்மனப்பாடி, மாலை 7 மணி – களரம்பட்டி, ஜன.31 அன்று மாலை 6 மணி- அம்மாபாளையம், மாலை 7 மணி – இலாடபுரம். பிப்.2- அன்று மாலை 5 மணி – கல்பாடி, மாலை 6 மணி – நொச்சியம், மாலை 7 மணி – புதுநடுவலூர், பிப்.4 அன்று மாலை 5 மணி – ஆலம்பாடி, மாலை 6 மணி கோனேரிப்பாளையம், மாலை 7 மணி- வடக்கு மாதவி ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

ஆலத்தூர் மேற்கு : ஜன.21 அன்று மாலை 6 மணி- தேனூர், மாலை 7 மணி- கண்ணாப்பாடி, ஜன.27 அன்று மாலை 5 மணி – பாடாலூர், மாலை 6 மணி- இரூர்,
ஜன.29 அன்று மாலை 6 மணி- எலந்தலப்பட்டி, மாலை 7 மணி- து.களத்தூர், ஜன.30 அன்று மாலை 6 மணி -நாட்டார்மங்கலம், மாலை 7 மணி- நாரணமங்கலம் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் : ஜன.20 அன்று மாலை 4 மணி- உடும்பியம், மாலை6 மணி-பெரியம்மாபாளையம், மாலை 7 மணி- வெங்கலம், ஜன.22 இன்று மாலை 6 மணி – அன்னமங்கலம், மாலை 7 மணி – தொண்டமாந்துறை, ஜன.23 அன்று மாலை 6 மணி- நூத்தப்பூர், மாலை 7 மணி- பாண்டகப்பாடி, ஜன.28 அன்று மாலை 6 மணி, வெண்பாவூர், மாலை 7 மணி – வடகரை, பிப்.3 மாலை 6 மணி – மலையாளப்பட்டி, மாலை 7 மணி – தழுதாழை, ஆகிய ஊர்களிலும்,

வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தில் : ஜன.21 அன்று மாலை 6 மணி- அயன்பேரையூர், மாலை 7 மணி – அகரம், மாலை 7 மணி- திருவாளந்துறை, ஜன.24 அன்று காலை 10 மணி – வாலிகண்டபுரம், மாலை 5 மணி- மங்களமேடு, மாலை 6 மணி – எறையூர், ஜன.26 அன்று மாலை 6 மணி – வி.களத்தூர், மாலை 7 மணி – பிம்பலூர், ஜன.27 மாலை 6 மணி- பசும்பலூர், மாலை 7 மணி- காரியானூர், ஜன.29 மாலை 6 மணி- அனுக்கூர், மாலை 7 மணி- நெய்க்குப்பை, பிப்.1 மாலை 6 மணி – வேப்பந்தட்டை, மாலை 7 மணி- தொண்டப்பாடி ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடக்க உள்ளது என்றும்,

இந்த கூட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில், ஊராட்சி கழக செயலாளர்கள் வரவேற்புரையில், (நான்) மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன்- தேர்தல் பணிக்குழு செயலாளர் வேளச்சேரி பி. மணிமாறன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.சாமி கலந்து கொள்வதாகவும், இதில், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துனை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!