DMK has rented the sun symbol in Perambalur: R.T Ramachandran MLA Talk!

அதிமுக சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக என்.ஆர். சிவபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், தலைமைக்கழக பேச்சாளர் கோவை அழகு, நகர செயலாளர் ராஜபூபதி, என்.ஆர்.டி செல்வமோகன் உள்ளிட்ட கிளைக்கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீதிவிதீயாக வாக்குகள் சேகரித்தனர்.

முன்னதாக, ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசியதாவது:

திமுக குடும்ப அரசியலை நடத்தி வருகிறது. தனது குடும்பத்தை சார்ந்த அத்தனை நபர்களுக்கும், கட்சியில் பொறுப்பை வழங்கி, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க பதவியை வழங்கி, தனது குடும்பத்தை வளமாக்கி கொள்வதை கடமையாக கொண்டு, ஒரு செயலாக செய்து வரக்கூடிய கட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம்.

ஆனால், அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், அதை வழிநடத்திய அம்மா அவர்களும், இந்த நாட்டு மக்களுக்காக தன்னை அர்பணித்து, வாழ்ந்து மறைந்த தலைவர்கள்.

தன் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு, எம்.ஜி.ஆராக இருக்கட்டும், அம்மா( ஜெயலலிதா)வாகட்டும், இவர்களெல்லாம், குடும்ப உறுப்பினர்களை கட்சிப் பணிக்கோ, ஆட்சிப்பணிக்கோ அமர வைக்காமல், அவர்களை எல்லாம் அப்புறப்படுத்தி, இந்த மக்களுக்காகவே முழுவதும் அர்பணித்தவர்கள்.

இந்த மண்ணை விட்டு மறையும் போது கூட தான் உழைத்து, சினிமா படத்தில் நடித்த சொத்துக்கள் அனைத்தையும் ஆதவற்றவர்களுக்கு விட்டு சென்றுள்ளார் புரட்சித் தலைவர். அம்மா கூட தான் உழைத்து சம்பாதித்த சொத்துகளுக்கு வாரிசு கூட நியமிக்கவில்லை.

நமது சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் சொன்னது போல, அரசாங்கத்தை நம்பி இருக்கக் கூடிய, அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன தேவை என்பதை ஒரு தாயாக திட்டம் தீட்டி செயல்படுத்தி உள்ளார். கர்ப்பிணி பெண்ணுக்காக இருக்கட்டும், அல்லது பிறந்த குழந்தையாக இருக்கட்டும், படிக்கின்ற குழந்தையாக இருக்கட்டும், அல்லது திருமண வயது எட்டியவராக இருக்கட்டும், ஒரு தாயாக இருந்து பார்த்து, பார்த்து என்ன செய்வீர்களோ, அத்தணை விசயங்களையும் அரசு திட்டமாக தமிழ் நாட்டு மக்களுக்கு அம்மா அவர்கள் வழங்கி உள்ளார்.

அன்பார்ந்த தாய்மார்களே! பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகம் அமைவதற்கும், பெரம்பலூரை திருச்சியில் இருந்து பிரித்து தந்தவர் அம்மா.

காவிரி கூட்டுகுடிநீர்த்திட்டம், திமுக ஆட்சியில் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இங்கு இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர் ஆ. ராஜாவிற்கும், திருச்சியில் இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அரசியல் போட்டியின் காரணமாக, அதை பெரம்பலூருக்கு, அந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், இருவரும், பெரம்பலூருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டால், நமக்கு தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என பொதுமக்களை தட்டிவிட்டு நேரு அவர்கள், பெரம்பலூருக்கு தண்ணீரை கொடுக்க மறுத்தார். இப்படி போட்டி போட்டுக் கொண்டு, ராஜாவும், நேருவும், பெரம்பலூருக்கு, தண்ணீரை கொண்டு வரமால் தவித்த போது, மீண்டும் அஇஅதிமுக ஆட்சி வந்த பிறகுதான், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் வந்தது என்பதை திமுக-காரர்கள் மறுக்க முடியாது. பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும், அம்மா காலத்தில்தான் மக்கள் தேவைகளை யாரும் தடுக்க முடியாது, யாராலும் முட்டுக்கட்டை போட முடியாது. அதுமட்டுல்ல, 5 ஆண்டுகாலம் திமுக ஆட்சி பெரம்பலூரில் நடந்தது.

உங்களுக்கெல்லாம் தெரியும், எத்தனை கல்லெறி நிகழ்ச்சிகள், எத்தனை ரவுடித்தனம், எத்தனை கடையடைப்பு, எத்தனை பெண்கள் பாதிப்பு, பேருந்து நிலையத்திலேயே பெண் போலீசை திமுகவை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் அடித்து என்று, அராஜகத்தை பார்த்தீர்கள், சமீபத்தில கூட ஆளுங்கட்சியாக இல்லாமல், எதிர்க்கட்சியாக இருக்கும் போது கூட பெண்கள் அழகு நிலையத்தில் திமுகவை சேர்ந்த ஒருவர் செய்த அட்டூழித்தை நீங்களெல்லாம் டி.வி.யில் பார்த்திருப்பீர்கள், முதலமைச்சர் சொன்னது போல, அப்படி ஒட்டு மொத்த ரவுடி கும்பலின் தலைவனாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, இத்தனை ஆட்டம் என்றால், ஆளும்கட்சியாக இருந்தால், அவர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இங்கே செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா அவர்கள் பெரம்பலூருக்கு இத்தனை இடங்களை பொது பயன்பாட்டிற்காக தந்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

அவர்களை பார்த்து கேட்கிறேன், அதன் அருகாமையில் போடப்பட்டுள்ள வீட்டுமனைகளை யார் போட்டது. ஒரு இடத்தை, அரசுக்கு தந்து விட்டு, மீதி அருகாமையில் இருக்கக் கூடிய அத்தனை விவசாய நிலங்களையும், விலைக்கு வாங்கி போட்டு விற்று பணம் சம்பாதிப்பதற்காக நீங்கள் அரசுக்கு ஒதுக்கினீர்களே தவிர, பொதுமக்கள் நலத்திற்காக அந்த இடங்களை அரசுக்கு வழங்கவில்லை என்பதை இந்த மக்கள் மறந்து விடமாட்டார்கள்,

அரசுக்கு ஒரு நிலம் வழங்கி இருக்கிறீர்கள் என்றால், அருகாமையில் போடப்பட்டிருக்கும் வீட்டுமனைகள் அனைத்தும், உங்களது சாதிக் நிறுவனத்தால் போடப்பட்ட வீட்டு மனைகள் என்பதை பெரம்பலூர் மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள், அது போல எந்த ஒரு வளர்ச்சிப் பாதையாக இருந்தாலும், பெரம்பலூருக்கு ஒரு திட்டம் வந்தால், இது அதிமுக கொண்டு வந்தாக இருக்கும், நகராட்சியை எடுத்துக் கொண்டால், சட்ட உறுப்பினர் சொன்னது போல சாலைகள் அனைத்தும், நெடுஞ்சாலைக்கு இணையாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளது. அதிமுக கோட்டையாக பெரம்பலூர் திகழ்வதால், பல திட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அன்பார்ந்த தாய்மார்களே, பெரியோர்களே, 8 ஆண்டு காலம் தொடர்ச்சியாக, அஇஅதிமுக ஆட்சி பெரம்பலூரில், தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த 8 ஆண்டு காலத்தில் இந்த மாவட்டத்தை சேர்ந்த எந்த சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களோ, ரவுடினத்தை, மக்களுக்கு தொல்லை தரும் ஏதேனும் ஒரு விசயத்தை செய்திருப்போமா என்று நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

அதே 8 ஆண்டுகளுக்கு முன்பு, 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது என்பதை அறீவீர்கள், அராஜகத்திற்கு பெயர் போன திமுக – விற்கு பெரம்பலூர் மக்கள் நீங்கள் நல்லதொரு மரியாதையை ஒதுக்கியிருப்பதால்தான், சட்ட மன்ற தேர்தலிலும், சூரியன் சின்னத்தை சிவகாமி அவர்களுக்கு வாடகைக்கு விட்டு, திமுக தொண்டர்களை பணியாற்ற செய்தது திமுக. இப்பொழுதும், பச்சமுத்து உடையாருக்கு அந்த சின்னத்தை வாடகைக்கு விட்டு, குத்தகைக்கு விட்டு, அந்த கட்சியை சேர்ந்தவர்களை எல்லாம், அவருக்கு உழைக்க சொல்லியிருக்கிறது.

திமுக தொண்டர்கள் எல்லாம் நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும். இங்கு இருக்கக் கூடிய நீங்கள், திமுக-வை வளர்ப்பீர்கள், வாக்கு சேகரிப்பீர்கள், காலம் காலமாக, இனி நீங்கள், தலைவராக வாய்ப்பே கிடையாது. பொதுமக்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, எம்.எல்.ஏ- ஆவதையோ எம்.பி ஆவதையோ, இங்கு இருக்க கூடிய தலைவரும் ஏற்கவில்லை, உங்கள் தலைமையும் விரும்பவில்லை என்பது புரிந்திருக்கும்.

அது போல எதிரணியில் நிற்கக் கூடிய வேட்பாளர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளுக்கு கூட பச்சமுத்து அவர்கள், நன்றி கூற வராதவர், அவரா உங்களக்கு நல்லது செய்யப்போகிறார். ஆகவே பொதுமக்கள் உங்கள், எளிய வேட்பாளர் என்.ஆர். சிவபதிக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!