தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான். எண்ணெய் தேய்த்து குளித்து புதுத்துணி உடுத்தி பலகாரங்கள் சாப்பிட்டு விட்டு வெடி வெடித்து அனைவரும் வயது வித்தியாசமின்றி கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பெரம்பலூரில் பட்டாசுக்கடை மற்றும் துணிக்கடைகளில் கூட்டம் தற்போது அலை மோதி வருகிறது. வேலை மற்றும் பள்ளிக்கு செல்வோர் கடைசி நேரத்தில் தான் தீபாவளி பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பட்டாசையும் தீபாவளியையும் பிரிக்க முடியாது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கூட்டுறவு பட்டாசுக் கடைகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஓரிரு இடங்களில் சைனா பட்டாசுகள் விற்பனை நடந்து வந்தாலும், பெரும்பாலான இடங்களில் சிவகாசி, சாத்தூர் பட்டாசுகளே அதிகம் விற்பனையாகி வருகின்றது. இந்த வருவாய் துறையினரின் கெடுபிடியால் பட்டாசுக் கடைகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர், ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசுக்களை தவிர அனைத்தையும் கொள்முதல் செய்து தீபாவளிக்காக காத்து உள்ளனர்.