Attiyur Rs. One crore 60 lakh financial provisions seriously delayed the construction works of the school: students suffer
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ப.தனவேலு அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை:
அத்தியூர் கிராமத்தில் கடந்த 2011 ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு அத்தியூர் மேற்கு பகுதியில் இயங்கி வருகிறது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ரூ. ஒரு கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது. அங்கு படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே வாளாகத்திலேயே அடைந்து கொண்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர் சேர்க்கை குறைய வாயப்பு உள்ளது. அது மட்டுமில்லாமல் அறிவியல் ஆய்வக பொருட்கள், உடற் கல்வி பயில போதிய இடவதியில்லை. மழைக் காலங்களில் கல்வி பயில வெகு சிரமம் அடைய நேர்கிறது. எனவே, ஏழை எளிய மக்களின் கல்வியை கருத்தில் கொண்டு பள்ளி கட்டுமான பணிகளை விரைந்து அரசு துவக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.