5 districts in the state 2-day series Notice to school Holiday

school kalaimalar.com

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை (2 நாட்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நாடா புயல் கடலூருக்கு அருகில் டிசம்பர் 2ல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் மற்றும் வானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!