3 men arrested for stealing a cell phone from a woman at a bus station in Namakkal

நாமக்கல் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செல்போனைப் பறித்துச்சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே உள்ள காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி வினிதா (24). இவர், சம்பவத்தன்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வினிதா கையில் வைத்திருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது பஸ் நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியில் இருந்த போலீசார் மர்ம நபர்கள் 3 பேரையும் பின் தொடர்ந்து சென்று விரட்டிப் பிடித்தனர். 3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நாமக்கல் சிவியாம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல்(22) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்கள் ஏற்கனவே திருடிய 4 திருட்டு செல்போன்களை மீட்டு விசாரனை செய்து வருகின்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!