District Pensioners Debate Day Meeting: Perambalur Collectorate Information
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை இயக்குநர் ஓய்வூதிய இயக்குநரகத்தை சேர்ந்த ஜெ.கயிலைநாதன் தலைமையில், தனது முன்னிலையில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் மார்ச்.12 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த குறைதீர்க்கும் மனுக்களை இரண்டு பிரதிகள் 07.03.2019 தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்கலாம். மேலும் 12.03.2019 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்துகொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.