gdp_20151207
திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 220 மனுக்களை பொதுமக்கள் நோpடையாக அளித்தனர். பொதுமக்களிடம் பெற்றுக்கொண்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். மேலும் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள திருநங்கைகளுக்கு புதுவாழ்வுத் திட்டத்தின் மூலமாக அரசின் மானிய உதவியுடன் வாகனங்கள் வாங்கிட அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென புதுவாழ்வுத்திட்ட அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) மாரிமுத்து, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர்கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!