கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுவெற்றிபெற்றது. கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் எதிர்கட்சித் தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, தனக்கு மக்கள் பெரும்பான்மை அளிக்காத நிலையிலும், முதலமைச்சராக பதவி ஏற்றது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். கூட்டணி கட்சியின் ஆதரவே தன்னை முதலமைச்சராக்கியுள்ளதாக குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் குமாராசாமி. இதனையொட்டி பா... எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 117 எம்.எல்.ஏக்கள் குமாரசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து குமாரசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!