பெரம்பலூர் நகரில் உள்ள இன்று மேலேரி நிரம்பியது. அதனால், அந்த ஏரிக்கு உட்பட்ட பாசன விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் தற்போது 36 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதனால் 50 சதவீத ஏரிகள் மழை நீரை முழுக் கொள் அளவை எட்டி உள்ளது. இன்னும் 10 க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இன்னும் போதுமான வடகிழக்கு பருவமழை இன்னும் 10 பத்து நாட்களில் மழை உள்ளது என்பதால் அதனால் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரம்பலூரில் இன்று காலை 7 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)
பெரம்பலூர் 12, வேப்பந்தட்டை 4, தழுதாழை 3, செட்டிக்குளம் 7, பாடாலூர் 6, மொத்த மழையளவு : 32 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 6.40 மி.மீ என பதிவாகி உள்ளது.