பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளான எசனை, சோமன்டாபுதூர் அனுக்கூர், வாலிகண்டபுரம், தழுதாழை அரும்பாவூர், வெங்கலம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், மலையாளப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு மழை பெய்தது.
அப்போது கீழ்த் திசை காற்று அதி வேகத்துடனும், பலத்த சத்தத்துடன் வீசியது. குப்பைகள் வீதிகளில் பறந்தன. காற்றின் சத்தத்தை கண்டு அஞ்சிய நாய்கள் குரைத்தன.
பெரம்பலூரில் மழையளவு விவரம்: பெரம்பலூர் 3 மி.மீ, தழுதாழை 10 மி.மீ மழையும் பெய்தது.
மாவட்டத்தின் பிற பகுதிகளான செட்டிகுளம், பாடாலூர், வெண்பாவூர் ஆகிய பகுதிகளில் காற்றுடன் மிக குறைந்த அளவு மழைத் தூறல்கள் மட்டுமே விழுந்தன