பெரம்பலூர்: வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சிக்குட்ப்பட்ட கடைவீதி பகுதியில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி மற்றும் வீடியோ படக்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் தமிழக முதலமைச்சர் திட்டங்கள் குறித்து வீடியோ படக்காட்சியும் நடத்தப்பட்டது.

இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்இ ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பெரியஅளவில் மக்களை கவரும் வகையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டுஇ தமிழக முதலமைச்சர் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெற்றனர்.

இப்புகைப்படக் கண்காட்சி மற்றும் வீடியோ படக்காட்சியினை பிரம்மதேசம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த 750 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமுடன் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து திட்டங்கள் குறித்தும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள் மூலம் கேட்டறிந்தனர்.

இக்கண்காட்சிகள் தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசின் சாதனைகளை பல்வேறு வகையான நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளுவதற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக இக்கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கருத்து தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!