பெரம்பலூர்: தமிழக அளவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் வென்றனர்.

state 1stState 2nd

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் மதிப்பெண் 500க்கு 499, இரண்டாம் மதிப்பெண் 500க்கு 498, மூன்றாம் மதிப்பெண் 500க்கு 497 பெற்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் தக்க வைத்துள்ளனர்.

பெரம்பலூர் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர். ரவீணா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றோர் பட்டியலில் உள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் 100க்கு: தமிழ் 99, ஆங்கிலம் 100, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் என மொத்தம் 500க்கு 499 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவரை போன்றே தமிழக அளவில் 40 பேர் முதல் இடம் பெற்றுள்ளனர்.

தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவன் ஜி. ரஞ்சித் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 98, ஆங்கிலம் 100, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் என 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதில் இவரும் உள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் பள்ளியை சேர்ந்த மாணவன் கவிபாரதி, பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவி ரோசினி, செயிண்ட் ஜோசப் பள்ளியை சேர்ந்த மாணவன் ஜெயபிரகாஷ் ஆகிய மூவரும் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மாநில, மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.

பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சக மாணவ-மாணவியர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!