பெரம்பலூர்: தே.மு.தி.க.,வின் முன்னாள் கழக பொதுச் செயலாளர் சொ. ராமுவசந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பாக மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி, சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர் ரவிகுமார், கேப்டன் மன்ற செயலாளர்
தவசி.அன்பழகன், தொழிற்சங்க நிர்வாகி இளையராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட தொண்டரணி புனிதராஜ் மற்றும் கட்சி நிர்வகிகள் கலைச்செல்வன், சதிஷ், ராஜா, சத்தியமூர்த்தி, ராமர் ஆகியோர் கலந்துக் கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.