பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை மலையப்ப நகர் பிரிவுசாலை அருகே இன்று அதிகாலை 70 வயதுள்ள அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பாடாலூர் போலீஸார் ஓர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.