2018ஆம் ஆண்டு வரையிலான வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க தமிழ்நாடு கிளையின் சிறப்பு பொதுக்கூட்டம் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விடுதி வளாகத்தில் நடைபெற்றது. இதில், 2018ஆம் ஆண்டு வரையிலான வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளித்தல், 18 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல், பொருளாளரை நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!